107
'உங்களுக்கு அனாவசியமாகச் சிரமம் கொடுத்து விட்டோம்!"
'இந்த உலகத்தில் எதுதான் சிரமமில்லை? எல்லாமே சிரமம்தான் ஏன், நாடகம் நின்றுவிட்டதா!'
'இல்லை; அதை எப்படிச் சொல்வது என்றுதான் எனக்கு விளங்கவில்லை!
'சும்மா சொல்லுங்கள்?"
'கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?" 'மாட்டேன்; எப்பொழுதாவது கோபித்துக் கொண்டாலும் என்னை நானே கோபித்துக் கொள்வதுதான் என் வழக்கம். நீங்கள் தைரியமாகச் சொல்லுங்கள்?"
'தம்முடன் நீங்கள் நாரதராக நடிப்பதை...
'நடிப்பதை...??
"கிட்டப்பா...
‘விரும்பவில்லை; எபபொழுதும் போல எஸ்.ஆர். பாகவதர்தான் அவருடன் நாரதராக நடிக்கவேண்டுமாம்!” என்று ஒருவாறு விஷயத்தைச் சொல்லி முடித்தார் அவர்.
நான் சிரித்தேன்! 'எல்லாவற்றுக்கும் சிரிப்புத்தானா?” என்றார் என்னை ஏற்கெனவே ஓரளவு அறிந்து வைத்திருந்த அவர்.
'இல்லை; சிலசமயம் அழுவதும் உண்டு' என்றேன் நான்.
"எதற்காக?' என்றார் அவர். "கிட்டப்பாவைப் போன்றவர்களுக்காக!' என்று சொல்லிவிட்டு நான் மீண்டும் சிரித்தேன். 'வருகிறேன்' என்று அவர் போய்விட்டார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாலைந்து வருடங்கள் எப்படியோ ஒடிவிட்டன. திரு. கிட்டப்பா என்னுடன்