t 0 முருகுசுந்தரம்
விபத்தில் இறந்தார். என்று வானொலி செய்தியை ஒலிபரப்புகிறது. ஆம்!
ត្តា
ஈழப்போராளிக் குழுவின்
தற்கொலைப்
படையைச் சேர்ந்தவள்!
பல்கலைக்கழக வாழ்க்கை
அவளுக்கொரு போர்வை
வெடிகுண்டை
மடியில் கட்டி வந்து
வெடிக்கச் செய்தவளே
அவள்தான்!” . என்று நெடுமுடி என்னும் சிபிஐ அதிகாரி அறிவிக்கிறான்,
நாடகத்தின் பெயர், காட்சிகள், பாத்திர்ங்களின் செயல் பாடுகள், வீணா எழுதிய விட்டில் பூச்சி குறியீட்டுக் கவிதை, இந்திய-இலங்கைப் பிரச்சனைகள், அதனால் இந்தியத் தமிழ் மண்ணில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள். இப்படி நம் கருத்தில் ஒவ்வொன்றாய்ப் படமாக விரிகின்ற போது நாடகத்தின் முடிப்பு எப்படி இருக்கப் போகிறது என்று ஊகித்து
விடமுடிகிறது.
- வீணாவின் எரிநட்சத்திர முடிவைப் படித்தவுடன்
சிலருக்கு அதிர்ச்சி ஏற்படலாம்; சிலருக்கு ஏற்கெனவே தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் மறுபதிப்புப் போன்றது. தானே என்ற அலட்சியும் இருக்கலாம். - சமகாலத்து அரசியல்-சமுதாய-வரலாற்று.நிகழ்ச்சியை மிக எளிய தமிழில்-படிக்கவும் நடிக்கவுமான தமிழில்-கவிஞர் ஆக்கித் தந்த பிறகு, வாசகர்கள் சில விவாதங்களை எழுப்பிக் கொள்ளவேண்டும்-விவாதிக்கவேண்டும். -
8 மரபுத்தமிழை முறையாகப் பயின்றவரும், பாவேந்தரின் தலைமாணாக்கர்களுள் ஒருவருமான முருகுசுந்தரம் இப்படிப் புதியபாணிக் கவிதை நூல் படைக்கலாமா என்று