பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 0 முருகுகந்தரம் அவர்கள் நண்பர்களை ஐக்கியப்படுத்தத் தவறியது; மறுபாதி காரணம் உண்மையான எதிரியார் என்று தெளிவுபடுத்திக் கொள்ளாதது.

இந்த ஐக்கியப்படுத்தலும், தெளிவு படுத்தலும் இருந்திருக்குமானால் இங்கே தமிழ்க்குருதியையும் இந்தியக் குருதியையும் சிந்தவைத்திருக்கமாட்டார்கள்.

நல்லவேளை முருகுசுந்தரம் படைத்த வீணா எதிரியார் என்று தெளிவாகவே உணர்ந்திருக்கிறாள்.

எரிப்பதற்கான இடம் இந்தியாவாக-தமிழ்நாடாக இருந்துவிட்டது. வீணா'வைப் பொறுத்தமட்டில் இதுதவிர்க்க முடியர்ததே!

ஆனால்,"யாரை?" என்பதில் வீனா தெளிவாகவே இருந்திருக்கிறாள். இந்த எரிநட்சத்திரம் பற்றி எல்லோரும் விவாதிக்க வேண்டும், சற்று உரக்கவே விவாதிக்க வேண்டும், எதற்காக?

-இனிமேலாவது பின்னடைவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமல்லவா அந்தப்போராட்டத்திற்கு, அதற்காக,

சிவகங்கை 31–8-93 ហ៊T