பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 2

சந்தித்த வீழ்ச்சியையும் நினைவூட்டுகிறார்! டாக்டர் உ.வே.சா. அவர்களது சீரிய பணியால் சிலப்பதிகாரம் மட்டும் தப்பித்துத் தமிழனுக்குக் கிடைத்தது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். (தமிழ் மொழியின் வரலாறு, பக் 51, 53) அந்த நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் பலவழிகளில் முன்னோடிக் காப்பியமாக-முதல் காப்பியமாக அமைகிறது. தமிழ்க் காப்பியங்களில் அதுவே முதலும் முதன்மையுமான காப்பியம் குடிமக்களுக்கு நாயக முதன்மை தந்த முதல் காப்பியம்; பெண்ணின் எழுச்சியைப் பேசிய முதற்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும் பெயர் விளங்கும் வண்ணம் கவிதையும் வசனமும் கலந்த உருவாக்கப் புதுமையிலும் முதற்காப்பியம்! இவை மட்டுமல்லாமல் அடியார்க்கு நல்லாரால் நாடகக் காப்பியம்’ என்று சுட்டப்படும் விதத்தில் அத்துறையிலும் முதற்காப்பியம்; இரண்டாயிரம் ஆண்டுப் பழமையுள்ள் சிலப்பதிகாரம் நாடகக் கூறுகளைத் தெளிவாகவே உலகத்திற்கு வெளிப்படுத்திய பிறகும் தமிழில் நாடகத்தின் வளர்ச்சி முறையாகவும் இல்லை, முதிர்ச்சியாகவும் இல்லை. நாடகப் பண்புகள், கூறுகள் நிறைந்த நூல்களைத்தான் நூற்றாண்டுகள் தோறும் காணமுடிந்தது. தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து விட்ட இந்தத் தளர்ச்சிக்கு-இடை வெளிக்கு-உரிய சிறப்புக் காரணங்கள் பல இருக்கலாம். ஏதேனும் பொதுப்படையான காரணம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்றுப் போக்கில் ஊகிக்க முடியும். இ. முருகையன் மொழியில் இப்படிச் சொல்லலாம்: "நெடியதொரு பழமரபை உடையது தமிழ்க் கவிதை. இந்த மரபின் சுமையுடன் நவீனத்துவத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது, தமிழ்க் கவிஞர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது (ஒருசில விதிசெய்வோம்’முன்னுரையில் அழகழகாய்,புதிய புதிய வடிவங்களில் சிற்பங்கள் வேண்டுமென்றால் மரங்களைச் செதுக்கித்தான் ஆக வேண்டும். மரபு என்னும் சுமையைச் சுமந்து கொண்டே இருந்து விட்டதால் பாரதிவரைக்கும் மிகப்பெரிய தேக்கநிலை ஏற்பட்டு விட்டது. எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' என்ற கதை சொல் புதிது பொருள் புதிது, சுவை புதிது, என்று மரபுச் சுமையைப் பாரதி மாற்றிக் காட்டிய பிறகும் கூட, ‘வேதாளம் முருங்கை மரம், ஏறிய கதையாக மரபுச் சுமையாகிறது. இதனால் பாரதிக்குப்பிறகு கூடத் தேக்க நிலை கணிசமாகவே நிகழ்ந்தது.