இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிழவி-2
1
மடந்தை
கொலைமுதிர் கண்கள் ! நெற்றி
குறைமதி ! நாசி எட்பூ !
தலைமயிர்ச் செறிவு நீலத்
தடங்கடல் அலேகள் ! நெஞ்சை
அலைத்திடு மார்பு பந்தாம் !
அசைந்தாடும் இடையோ ஈயார்
தலைமுறை யாக வாயில்
தங்கிய 'இல்லை’ச் சொல்லாம் !
2
பெண்களை வெறுத்தார், வீட்டைத்
துறந்தவர், பெரியார் நெஞ்சில்
தண்மையைச் சேர்க்கும் வாட்கண்
மடந்தையின் சொற்கள் ! தாவி
உண்டிட மேன்மேல் செம்மை
ஒளிபெறும் உதடு ! கோடை
விண்ணனல் மாற்றுந் தோப்பாம்
மடந்தையின் மெருகுக் கன்னம் !