பக்கம்:எழில் உதயம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியாத கன்னிகை 81

அவர்களிற் சிலர் தாமாக முயன்று அவளை அடைய எண்ணுகிருர்கள். பேதைக் குழந்தைகள் பலர் பவபந்தத் தினின்றும் விடுபட அறியாமல் தியங்கிக் கதறுகிரு.ர்கள். அவர்கள் தம் அன்னை இவள் என்று உணர்ந்து உருகினல் அவள் கருணை மிக்கு அவர்களை அடைந்து அவர்களுடைய பாசக்கட்டை நீக்கிவிடுகிருள். என்னுடைய பாச விலங்கை யெல்லாம் எம்பெருமாட்டியே கருணையிஞல் என்பால் எழிந்தருளி வந்து அரிந்தாள்’ என்று கூறுகிருர் அபிராமி பட்டார்.

என் பாசத் தொடரை எல்லாம்

வந்து அரி சிந்துர வண்ணத்தினள்.

பாசத்தினுல் கட்டுப்பட்ட பசு அந்தப் பாசத்தினின் றும் விடுபடுவதே முத்தி. பாசத்திற் கட்டுப்படாமல் இருப்பது பரப்பிரம்மமாகிய பதி. பாசக்கட்டு நீங்கிளுல் பசுவானது பதியோடு சேர்ந்துவிடும். அந்தப் பாசம் நீங்கப் பசுக்கள் பல பல முயற்சிகளைச் செய்கின்றன. இறைவன் திருவருள் இல்லாவிட்டால் பசுவினுடைய முயற்சியினல் பாசவிமோசனம் உண்டாகாது. - என்னுடைய பாசத்தை நீக்கும் முயற்சியை நான்

செய்ய வேண்டும். அதற்குரிய ஆற்றல் எனக்கு இல்லை. நான் எம்பெருமாட்டியே கதி என்று இருந்தேன். அன்னை என்னுடைய நிலையை உணர்ந்து தாேன என்ன அணுகி என் பாசத் தொடரை அரிந்துவிட்டாள்" என்ற எண்ணங் களை உள்ளடக்கி,

என் பாசத்தொடரை எல்லாம்

வந்து அரி என்கிரு.ர். பசுபாச விமோசனி, பாசஹந்த்ரி என்பன அம்பிகையின் திருநாமங்கள். அவளை அடையாளம் கண்டு கொண்டவராதலின்,

6 سنة كبإrه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/89&oldid=546246" இலிருந்து மீள்விக்கப்பட்டது