பக்கம்:எழில் விருத்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - - வாணிதாசன் உழைப்பினைப் பொதுமை ஆக்கி உருப்பெறும் விளைவை எல்லாம் பிழைப்பவர் பகிர்ந்து துய்க்கப் பேணுதல் பொதுமை ! ஆனால் உழைப்பினை விளைவை எல்லாம், மணிக்கூண்டே ! உனக்கெண் ணாமல் அழைத்துவாழ் மக்கட் கீயும் அருஞ்செயற் கீடும் உண்டோ? 9 அறிவினால் பிறந்தாய்; வாழும் அழகூரின் நடுவில் நின்றாய்; நெறியொடு காலங் காட்டும் நீர்மையை நினைக் குந் தோறும் அறிவுக்கே உலகம் அண்டம் அணுவுமே அடிமை யாகும்! அறிவுக்கு வணக்கம் செய்வோம்! அறிவினைப் பெருக்கு வோமே! 1 O "சிர்விள மாச்சி தேமாச் சிரிணைந் திரட்டு மீங்கே" என்னும் ‘விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். விளம் என்ற இடத்துக் கூவிளம், கருவிளம்_இரண்டும், மா என்ற விடத்துத் தேமா, புளிமா இரண்டும் கொள்க. விளச்சீர் வரும் என்று விதித்த இடத்தில் தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களும் வரும் என்று அறிக. இறுதிச்சீர் தேமாவாகவே வருதல் வேண்டும் எனக் கொள்க.