பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


பாடுபட்ட பாட்டாளி
கொட்டாவி விடுகின்றேன்
ஆவ்...
உறக்கம் வருது பசிமறக்கும்.

இ. அண்ணாமலை என்பவரின் நோக்கு இது. (எழுத்து 66 - 67) சி.மணி காணும் தோற்றம் வேறு ரகமானது.

நல்ல பெண்ணடி நீ!
முகத்திரை இழுத்து விட
இரண்டு வாரம்
அதை எடுத்து விட
இரண்டு வாரம்
இதை விட்டால் வேறு
வேலையே இல்லையா உனக்கு?

என்று நிலவைப் பார்த்துக் கேட்கிறார் அவர். (எழுத்து 68}

அதே நிலவை சு. சங்கரசுப்ரமண்யன் வேறுவிதமாகப் பார்க்கிறார் (எ.69)

அவளோ
சினிமாக்காரி
உருவம் காட்டி
ஊரை மயக்க
ஒளி பாய்ச்சி
குளோசப்பில்
நிறுத்துகிறார் யாரோ.
அப்படியே
இருந்துவிட்டாலோ
முகப்பருவும்
மேக்கப்பை
மீறிவிடும்
எனவேதான்
ஒளி குறைத்து
நிழல்பூசி
ஒளிக்கின்றார்
காமிராவேலைக்கு
காரிகையா பொறுப்பு!

259