பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகநீதி

77



உலகநீதி


பாட்டு 7


கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம்
     கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
     பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
     எளியாரை எதிரியிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
     குமரவேல் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.


பாட்டு 8


சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
     செய்ந்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
     உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
     பிணைபட்டுத் துணைபேசித் திரிய வேண்டாம்
பாராருங் குறவருடை வள்ளி பங்கன் -
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

பாட்டு 9


மண்ணின்று மன்றோரம் செய்ய வேண்டாம் .
     மனஞ்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம் -
     காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
     புறஞ்சொல்லித் திரிவரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன்
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/81&oldid=1332770" இலிருந்து மீள்விக்கப்பட்டது