பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகநீதி

79




உலகநீதி
 
பாட்டு 10


புறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
    வாதாடி வழக்கழிவு செய்ய வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
    தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
    ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
    குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே.


பாட்டு 11


கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம் -
    கொண்டைமேல் பூத்தெரிய முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
    துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
    வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
    மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

பாட்டு 12


ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி
    அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
   உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும் -
   கருத்துடனே நாடோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்
   பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே.


★★★
உலகநீதி முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/83&oldid=1356768" இலிருந்து மீள்விக்கப்பட்டது