பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஞானியரோ மிகப் பெரியர் ஞாலத்தில் கலப்பதில்லை.
யோகியரைச் சொன்னால் இறைவனே ஆவார்.
மற்றபடி யானறிந்தவரை சொல்லுகின்றேன்
இமயத்தின் சிகரத்தில் ஈயம் உருகியதோ
வெள்ளிக் குழம்பு பொங்கி வழிந்ததோ
வெண்ணிலவு பனியாய்க்கரைந்து உருகியதோ
அருவிகள் திரண்டு ஆறாய்ப் பெருக்கெடுத்து
கங்கை என்ற பெயர் கொண்டு நடந்தது.
சரயு யமுனையும் அதனுடன் கலந்தது.
சரயுநதி தீரத்துக்கு சரித்திரப்பேர் கோசலம்
அதனை ஆண்டவர்களில் ஆண்டவன் என்பேன்
தூய்மையில் நெருப்பானவன் துணிவில் புயலானவன்
கீர்த்தியில் கதிரவன் கிளர்ச்சியில் சந்திரன்
பொறுமையில் பூமி புனிதத்தில் கங்கை.
உறுதியில் இமயம் உயர்வினில் நீலவான்
சிந்தனையில் ஆழ்கடல் சீற்றத்தில் வேங்கை
அறிவினில் தேவகுரு ஆற்றலில் இந்திரன்
தருமத்தின் ரகசியம் தெளிவாகத் தெரிந்தவன்
சத்தியம் அன்றி வேறு தெரியாதவன்
சினத்தை வென்றவன் அழுக்காறு அவனறியாதது
புலன்கள் அடக்கம் புத்தி அவன் கைவசம்
சுக துக்கம் இரண்டிலும் ஒரேசித்தம்
ராஜநீதி முற்றும் கற்றவன்.
அகத்திலும் புறத்திலும் பகையற்றவன்

அழகினில் மன்மதன் அருளினில் திருமுருகன்