இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரஞர்
செவந்திவந்து சிலபேசிச்
சிறுவனுடன் ஆடிச் செய்வினைக்குத் துணையிருந்து
செல்வதுடன் நின்றள்! உவந்த நிலை சிறிதுண்டால்
ஒருமகளும் சேரன் ஒளிமுகத்தின் பார்வையிலும் உரைக்குமொழி யிலுமே! திவந்துயர்ந்த அத்தையன்பு
நிழல்படிந்து தோயும்! நினைவினிலே செம்மலுரு
நெடுங்கல்லாய் நிற்கும்! அவிந்ததுவே பழையகதை
அழிந்ததவள் பிறவி ஐயையெனும் பழம்பெயரில்
புதுப்பிறவி யாள்ை! 5
செங்கதிரும் பொழுதுகளும் - வந்துவந்து போகும்;
செழுந்தென்றல் காற்றுவரும்;
வாடையென மாறும்! பொங்குமதி தேய்ந்திருளும்;
புதுப்பிறைகள் தோன்றும்; பொங்கல்வரும்; புனல்பெருகும்;
போனவிழா மீளும்!
41