பக்கம்:ஐயை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டுநீர் விழியால் குமைந்த பின்றை தெட்டுயிர்ப் போடு கனவின் நேர்ச்சியும் அத்தான் அடிவிழுந் தன்புக் கிரந்ததும் ஒத்துக் கொளாதவன் பின்னுளம் ஒத்ததும் அதன்பின் இருவரும் ஆடிப்பா டியதும் புதுமகிழ் மாலை பூங்கை தொடுத்ததும் அதுதன் குழலுக் கமையச் சூடாது இடையில் வந்தாள் ஒருத்திக் கிட்டதும் மடைதிறந் ததுபோல் கண்ணிர் மடுத்தே மெய்நா நடுங்க மின்னுடல் வாட . ஐயை அவள் துயர் அத்தைக்கு மாற்றினுள்1

கொடுங்களு முதியோள் கூர்ந்து கேட்டுளம் நடுங்கின ளெனினும் நா.நடுங் காமல் "அடி, சிறு பேதையே! அழகும் இளமையும் குடிகொண்டுள்ள குமரிப் பெண்டிர்க்கு இதுபோற் கனவுகள் இயற்கையே என்றும் "அதுமற என்றும் ஆறுதல் அளித்தாள்! ஐயை தாளாது அக்களு தேர்ச்சியின் மெய்ப்பொருள் என்னென. மேலும் வினவினள்! பொய்ப்பொருள் ஒன்றைக் கூறிப் பூவையைத் தேற்றின ளாயினும் தேர்ந்த உண்மைக்கு ஆற்ருது உள்ளம் அமுங்கிள்ை முதியோள்!

19

ஐயை.

335

340

345

350

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/33&oldid=1273493" இலிருந்து மீள்விக்கப்பட்டது