பக்கம்:ஐயை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்.

தண்டைச் சிலம்பொலி தாவிட நடப்பதும், கொண்டையும், பனிச்சையும், குழலும், பின்னலும் 405 என்று பலவா றிருங்குழற் புனைவதும், நின்றவன் நகர்க்கதை நிகழ்த்தக் கேட்பதும்,

கற்றவை அவன்யால் கருத்தொடு மடுப்பதும், குற்றுநெல் புடைப்பதும், குறும்பா விசைப்பதும், பண்ணியம் பலவும் பண்ணி அன்ப்ோடு 4} 0 உண்ணக் கொடுப்பதும், உண்பதை மகிழ்வதும், ஏடு கொணர்வதும். எழுதுகோல் ஈவதும் பாடெனக் கேட்க, பாடி யிருப்பதும், கனநீர்க் கொணர்வதும் சுள்ளியாற் காய்ந்த வெந்நீர் மேனிக்கு விளாவிக் கொடுப்பதும், 4/5 பொன்னுடல் கண்டுளம் பூரித் திருப்பதும், மின்னென மானென மீனெனத் திரிவதும் அத்தான் கண் முன் அடிக்கடி மேய்ந்த முத்து நகைச்சியின் மொய்ம்புக் குறும்புகள் செம்மல் வந்தபின் சிட்டாய்ப் பறந்து 420 தன்கை வேலையைத் தானே முடிப்பதை அத்தையும் அறிவிாள்; அகமகிழ்ந் திருந்தாள்! எத்திறத் தானும் பொருத்தமென் றெண்ணிள்ை!

ஒரிரு நாட்கள் இவ்வா ருெழிந்தன. நேரிழை குன்றம் நினையா திருப்பதை 425 ஒருநாள் அத்தை உணர்த்தி "ஒண்டொடி!

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/38&oldid=1273498" இலிருந்து மீள்விக்கப்பட்டது