இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரனர்
இடிந்திருந்த குடிலகற்றி
எழில்மனையைக் கட்டி இல் புகுமோர் ஏழையைப்போல்
இறுமாந்து நின்றே, 'விடிந்ததத்தான்; தெரியவில்லை;
விருந்துசெய்ய வேண்டும்! வெந்நீர்வைத் திருக்கின்றேன்;
குளித்திருங்கள்” என்ருள்! A 2
ஐயைக்கு நிறைமகிழ்ச்சி!
கண் தெரிய வில்லை! அடுப்படியில் பெருவேலை!
அறுத்துவந்தாள் காய்கள்! கையறுத்துக் கொண்டாள்,அக்
காயரியும் போது! கடுகையள்ளி உப்பென்று
'களுக்கென,த கைத்தாள்! மெய்யுடையைச் சரிசெய்தாள்:
நூறுமுறை மேன்மேல் மேலாடை நழுவிவிழ
எடுத்தெடுத்துப் போட்டாள் பையனிடம் போவதுபோல்
பலமுறையும் செம்மல் பக்கம்போய் நின்று,அவனைப்
பார்த்துமகிழ் வுற்ருள்! Ꮋ 3
23