பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器盟墨 535● 5360 葛37琶} சாவாளாய்க் துணிந்து கொண்டு தந்தை முகம் பாராமல் வாகாகத் தீக்கு வளைந்து தெற்கே வந்து நீட்டி யேகாந்த மாகயங்கே ஏற்ற நல்ல நீராட்டி நீராடிப் புரவியின் மேல் நேரிழையாள் வரும் பவனி காராரும் பூவுலகில் கன்னியர்கள் புடைசூழ பாராளும் பூவுலகில் பார்க்க வந்தோர் மனமுருக செத்திறந்த ராசனுக்கு தீக்கடன் நீர்க்கடன் செலுத்த எள்ளும் தண்ணிரும் இறைத்து எல்லா சடங்கும் முடித்து அவர் தனக்கு தென் திசையில் ஆயிழையாள் தீக்குழியில் பரமசிவன் பார்வதியை பரவினையாய் மனத்திலுன்னி திக்குழியில் விழுந்திறந்தாள்; சேயிழையாள் வடிவு . . அம்மான்! வன் குலையாய் மடிந்ததினல் மாய வரம் வேணு மென்று பரமசிவன் பார்வதியை பாவினையாய் அடி தொழுது சேர சோழ பாண்டியர்கள் தேசத்திலும் பூசையுண்ண எங்களைத்தான் வணங்குதற்கு ஈடேற வரம் வேணு மென்று என்ன வரம் வேணு மென்று ஈஸ்வரரும் கேட்கலுற்ருர் குறும்படக்கி குடி வளர்க்க கோடி வரம் வேணு மென்ருர் பரமசிவன் பார்வதியும் பாவனையாய்.மனமகிழ்ந்து வேணுமென்ற வரங்களெல்லாம் விருப்பமுடன் தான் கொடுத்தார் அதிக வரம் வாங்கிக் கொண்டு அவர்களெல்லாம் வந்த போது ஆலயங்கள் பதி தோறும் அவர்களெல்லாம் பூசை கொண்டார் தேசமெல்லாம் பூசையுண்டு சிறப்புடனே அரசிருந்தார் இந்த கதை தனைத் தான் யெழுதிப் படித்தோர்கள் கத்து நன்ருய்ப் படித்த வரும் களறியிட்டுக் கேட்ட வரும் உற்று நன்ரு ய் அகமகிழ்ந்து உள் பொருள்கள் தெரிந்த வரும் பாடிப்படித்தவர்க்கும், பணிமுரசுட மானங் கொட்டி ஆடியலங்காரம் செய்து அம்புவியில் கீர்த்தி பெற்ருர் நித்தம் கன்னியாதானமாக நீடுழி வாழ்கவேதான் முற்றிற்று