மொழி நூல் நெறிமுறைகள்
௩௩
(4) அரசியலின்மை
(5) தாங்குநரின்மை
(6) சிதைவுகாப்பின்மை
(7) சொன்மாற்றம் i.பணிவுடைமையால்
ii. தனிமக்கள் விருப்பத்தால்
(8) பிறமொழிக்கலப்பு
ஒலி, சொல், பொருள் என்னும் மூவகையிலும் ஒரு மொழிதிரியும் முறைகள் முன்னர்க் கூறப்பட்டவையே.
இத்திரிபுகளெல்லாம், இம்மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விரிவாய் விளக்கப்படும். இவற்றுள், சிலவற்றை இப் புத்தகத்தின் இறுதியிற் காணலாம்.
24. ஒரு மொழி சில காரணங்களால் வழக் கழியலாம்.
ஒரு மொழி வழக்கழிதற்குக் காரணங்களாவன :
(1) செயற்கை வளர்ச்சி முதிர்வு. கா : சமஸ்கிருதம்.
(2) பேசுவோர் அநாகரிகராயிருந்து பிறநாகரிக மொழியை மேற்கொள்ளல்.
ஆப்பிரிக்காவினின்றும் அமெரிக்கா சென்ற நீகரோவர், தம் மொழிகளை விட்டுவிட்டு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டமை காண்க.
(3) பேசுவோர் சிறு குழுவாய்ப் பிறமொழி பேசும் பெரும்பான்மையோர் நடுவிலிருத்தல்.
(4) போர், கொள்ளைநோய், எரிமலைக் கொதிப்பு முதலியவற்றால் ஒரு மொழியாரெல்லாரும் அழிக்கப் படல்.
25. ஒரு மொழி புதிதாய்த் தோன்றலாம்.
புதுமொழி தோன்றும் வகைகள்
i. செயற்கை கா:எஸ்பெரான்ற்றோ (Esperanto)
ii. கலவை கா:இந்தி
iii. மொழிவழக்கு வளர்ச்சி கா:தெலுங்கு
26. அடுத்தடுத்து வழங்கும் மொழிகள் தம்முள் ஒன்றி னொன்று கடன்கொள்ளும்.