பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௫௬

தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல் யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி”[1] என 36 வகையென்று அடியார்க்கு நல்லார் கூறுவதினின்றறியலாம்.

“ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம்” (பத். 4 : 169) என்பதினாலும், பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடையென்னும் பொதுப்பெயர் இருத்தலாலும், பாம்பு கழற்றிய மீந்தோல் சட்டையெனப் படுதலாலும், இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் நொய்ய ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதறியப்படும்.

நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன.

பன்னல் = பருத்தி. L. punnus, cotton, It. panno, cloth.

கொட்டை = பஞ்சு. Ar. qutun, It. cotone, Fr. coton, E. cotton.

கொட்டை நூற்றல் என்னும் வழக்கை நோக்குக. பருத்திக் காயினின்று கொட்டுவது கொட்டை.

வேட்டி = ஆடை. L. vestis, Sans. வஸ்த்ர, E. vesture.

வெட்டுவது வேட்டி. ஒ.நோ : துணிப்பது துணி. அறுப்பது அறுவை. வேட்டியை வேஷ்டி என்று தமிழரே தவறாய் வழங்குகின்றனர். இது இன்னும் வடமொழிக்குட் புகவில்லை.

“தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு” என்று பட்டினத்தார் கூறுதல் காண்க. (திருத்தில்லை, 17)

சேலை = (சீலை) நீண்ட அல்லது அகன்ற துணி.

A.S. segel, E. sail.

தச்சு = L. texo, E. texture, anything woven. தை + சு = தைச்சு — தச்சு. தச்சு = தைப்பு. தச்சு என்னும் பெயர்


  1. 1.சிலப்.பக்.379

ஒ.மொ—15