பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டில் தென்பாகம்...காரணங்கள்

க௮௫

திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கிய தாகும்.தெலுங்கு தமிழினின்னும் பிரிந்துபோன பின்பு,முன்பு ஒன்றாயெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு,ஆந்திர திராவிட பாஷா என்னும் இணைப்பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின்,கன்னடம்,மலையாளம் முதலிய மொழிகள் பிரித்து திராவிடம் பல்கிய பின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள்,முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லா வற்றுக்குமாக வரையறுக்கப்பட்டன. இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழி கட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருத்தியதும், மிக வளமுள்ளதும், அதனால் மிகச் சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க*

1. திராவிடம் வடக்கு நோக்கித் திரிதல்

(i) தமிழ் நாட்டில், பாண்டி நாட்டுப் பகுதியாகிய தென்பாகமே இன்றும் தமிழுக்குச் சிறந்ததாக வுளது. பாண்டியனுக்குத் தமிழ் நாடன் என்ற பெயர் திவாகரத்திற் கூறப்பட்டுள்ளது.ஆகவே, பாண்டி நாடு தமிழ் நாடெனச் சிறப்பிக்கப்பட்டதாம்.

சோழநாட்டைத் தமிழ் நாடென்றும், தொண்டை நாட்டைச் 'சான்றோருடைத்து' என்றும் கூறியது பிற்காலமாகும். தமிழரசர்க்குள், முதலாவது ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டவன் பாண்டின். அதனாலேயே,இன்று தென்பாகத்தில் வடபாகத் திலிருப்பது போன்ற தமிழுணர்ச்சி யில்லை. ஆயினும், நாட்டுப்புறத்திலுள்ள குடியானவர் கனிடைப் பண்டைத் தமிழ்ச் சொற்களும் வழக்குகளும் பல இன்றும் அழியாதிருந்து, பாண்டி நாட்டின் பழம் பெருமையை ஒரு சிறிது காத்துக்கொண்டிருக்கின்றன.

2.தமிழ்நாட்டில் தென்பாகம் சிறந்ததென்பதற்குக் காரணங்கள்

(1) தமிழை வளர்த்த அல்லது காத்த மூன்று கழகங் களும் பாண்டிதாட்டிலிருந்தமை.


  • Caldwell's Comparative Grammar, pp, 1, 4, 9, 80, 370.