பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

101 |  வெள்ளியங்காட்டான் 

நேற்று முன் தினம் மைசூரிலிருந்து கடிதம் வந்திருந்தது. என் வரவை மீண்டும் அவர்கள் விரும்புகிறார்கள். இங்கு என் காலம் வீணாகிக் கொண்டிருக்கிறது.

என் முதன்மையானதும், அவசியமானதுமான விருப்பம் குமுதா, ரவீந்திரன் இவர்களைப் பார்ப்பது. அது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இரண்டாவதுதான் புத்தகம். அது என்னைப் பொறுத்தவரையும் அவ்வளவு அக்கரையில்லை. அது உன்னுடையது. உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். எனவே நான் வந்த காரியம் ஒருவாறு நிறைவேறிவிட்டது.

மற்ற படி உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இங்கு அனைவரும் நலம்

உன் அப்பா

வெள்ளியங்காட்டான்.