பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52 |  ஒரு கவிஞனின் இதயம்

         எப்படியிருந்தாலும் மழை பெய்தது, அது எல்லோருக்கும் டாக்டரம்மாவைப் போலவே உதவிச் சந்தோஷத்தை அளிக்கிறது. மனோகரன் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதுபோல் தெரிகிறது. எப்படியாயினும் சரி அவன் கெட்டிக்காரனாக, சுயமரியாதையோடு வாழ அறிந்து கொண்டால் போதும். என்னைப் பொறுத்தவரையில் நான் நளினிக்காகவும், மனோகரனுக்காகவும் இன்னும் சிறிதுகாலம் கஷ்டப்படத் தயாராகவேயிருக்கிறேன். நம் எல்லோருடைய எதிர்காலமும் சுபிட்சமாகவே இருக்குமென்று நம்புவோமாக.
          மற்றவையாவும் நலம்.
                             உன் அப்பா வெள்ளியங்காட்டான்.







பி.கு: அண்ணா ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது