பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

83 |  வெள்ளியங்காட்டான் 

02.02.1962

இரத்தினபுரி காலனி

தற்சமயம் நான் 1-4-0க்கு கடனாளியாக இருக்கிறேன்!

அன்புச் செல்வன் மனோகரன், நலம் நலமாகுக! இதற்குமுன் நான் எழுதிய இரண்டு கடிதங்களுக்கும் உன்னிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. நளினிக்கு எழுதிய கடிதத்திற்கும் பதில் இல்லை. அக்கா அங்கே வந்திருப்பாள் என்று நினைத்து புளியம்பட்டிக்கு நான் கடிதம் எழுதவில்லை.

உங்களிடமிருந்து கடிதமே இல்லாததால் என்னைச் சுற்றி ஒரு கனமான திரை கவிழ்ந்திருப்பது போன்றிருக்கிறது. இவ்வாறே இன்னும் சில நாள் இருப்பின் எனக்கு இதுவும் பழக்கமாகிவிடும். என்ன நேரினும் சரி. இங்கேயே இருப்பது என்று நான் முடிவு செய்துவிட்டேன். ஒரு சில மாதத்திற்கு மட்டும் உன் உதவியை இன்னும் நான் நாடியாகவேண்டும். பின்பு என் உழைப்பே என் வாழ்வுக்கு போதுமானதாகும் என்று நம்புகிறேன்.