உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே காருக்குள் இருந்த 'ஒயர்லெஸ்' மூலம் தன்னுடைய அந்தரங்கச் செயலாளனிடம், "பாபு அங்கே இருக்கிறானா...பார்த்துச் சொல்!" என்றான். சிறிது நேரத்தில், லெஸி'ல் குரல் கேட்டது. காருக்குள்ளிருந்த ஒயர் "எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தோம். பாபுவைக் காணோம் பாஸ்! - -தனது அந்தரங்கச் செயலாளன் கூறியதைக் கேட்டதும் மாணிக்கத்துக்கு சந்தேகம் வலுத்தது. நான் சந்தேகப்பட்டது சரியா இருக்கும் போலிருக்கே பாஸ்! என்றான் மெய்க்காவலன். நான் அப்படி நம்பலே... எதற்கும் போய்ப் பார்க்கலாம்!" என்றான் மாணிக்கம். சந்தேகமும், குழப்பமும் அவனிடம் காணப்பட்டன. அங்கு ஆனாலும் ம ர்ம மாளிகையை அடைந்து, கார் நின்றது. கோபக் கனல் தெறிக்கக் கீழே இறங்கினான் மாணிக்கம். மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்து நின்றிருந் தனர், அவனது அந்தரங்கச் செயலாளனும், மற்றவர் களும். நல்லா, எல்லா இடத்திலேயும் தேடிப் பார்த்தீங்களா?" இரைந்தான் மாணிக்கம் "பார்த்தோம் பாஸ்... அவனைக் காணோம்! என்றான் அந்தரங்கச் செயலாளன். பற்களை நறநற' என்று கடித்த மாணிக்கம் பாபுவைக் கண்காணிச்சது யார்?" என்று கத்தினான். கூட்டத்திலிருந்த ஒருவன், மாணிக்கத்தின் முன் பணிவாக வந்து, 'நான்தான் பாஸ்! எவ்வளவோ ஜாக்ரதையாத்தான் இருந்தேன்.....!" என்றான் பரிதாபமாக. அவன் குரலும், உடலும் நடுங்கின. ஒரு சின்னப் பொடியன்கிட்ட ஏமாந்தியா' என்று கேட்ட மாணிக்கம், துப்பாக்கியை எடுத்தான். டூமில். விழுந்தான். அடுத்த கணம் அந்த மனிதன் சுருண்டு துப்பாக்கியைத் தனது பாக்கெட்டுக்குள் வைத்தபடியே, "எல்லாரும் போயி தேடுங்கடா!" என்று கத்தினான். ஒருவர் கூடப்பாக்கியில்லாமல் திசைக்கும் பறந்தனர். தேவகியின் அறைக்குச் சென்றான் மாணிக்கம். நாலா தன்னை நோக்கி மாணிக்கும் கோபத்துடன் வருவதை அறிந்த தேவகி, 'பாபு தப்பிவிட்டான் போலி ருக்கிறது' என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டாள். அப்படி நினைக்கும் போதே அவளுக்கு ஒரு தெம்பும், உற்சாகமும் பிறந்தது. 69