பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் என்றே ஊர்க்காரர்கள் எண்ணினார்கள். விரைவிலேயே அவர்களுக்கும் விவரம் தெரிய வந்தது. மகிழ்வண்ணபுரம் பல வசதிகளைப் பெறுவதற்கு இருந்தது. முதலாவதாக, நல்ல மருத்துவமனையும் மகப்பேறு நிலையமும் நிறுவப்படும். ஒத்தை வீட்டில்தான் இவை அமையும். நூல்நிலையம், வாசகசாலை, உயர்நிலைப்பள்ளி எல்லாம் வரிசையாக வந்துசேரும். விளையாட்டு மைதானம், பொதுப் பூங்கா, குடிநீர் வசதிகள்.நாகரிக நகரத்தின் அம்சங்களை எல்லாம் மகிழ்வண்ணபுரம் அடைந்து விடும். தொழில் முயற்சிகளும் அவ்வூரில் துவக்கப்பெறும். சுவை மிகுந்த பிஸ்கட்டுகள் தயாரிக்கும் நிலையம், சத்து உணவுகள் உற்பத்திச்சாலை-இப்படி, அநேகருக்கு வேலை வாய்ப்புகளுக்கு வகை செய்யக்கூடிய அமைப்புகளும் தோன்றும். மகிழ்வண்ணபுரம் விரைவிலேயே மறுமலர்ச்சி பெற இருந்தது. அதன் முன் அறிவிப்பு போல் புதுப் பொலிவுடன் விளங்கியது ஒத்தை வீடு. سویهد: تک ===== مجموعهس