பக்கம்:ஒரே உரிமை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேற்றுவார் யார்?

73

கவனம் சென்றது. கைவசம் அப்போது இருந்ததும் ஐந்து ரூபாய்தானே? ஆகவே அதற்குமேல் அவளுடைய யோசனை ஓடவில்லை.

அந்தப் பழத்தை வாங்கி ஒன்று ஓரணா என்று விற்றாலும் ஒன்றேகால் ரூபாய் லாபம் கிடைக்கும். “அங்கே நிற்காதே; இங்கே உட்காராதே!” என்று அடிக்கடி வந்து மிரட்டும் போலீஸ்காரர்களுக்கு ‘நாலணா தண்டக் காசு’ அழுதாலும்கூட ஒரு ரூபாய் கட்டாயம் மிஞ்சும். ஊராரில் சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பலூன் வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்துவிடுகிறார்கள், அதைப் பார்த்துவிட்டு நம் குழந்தைகளும் தங்களுக்குப் பலூன் வாங்கித் தர வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்களாய் ஒற்றைக் காலால் நின்று தொலைக்கின்றன. நம்முடைய நிலைமை அந்தக் குழந்தைகளுக்குத் தெரிகிறதா, என்ன? நாமும் எத்தனை நாளைக்குத்தான் அவற்றை ஏமாற்றிக்கொண்டு வருவது? இன்றைக்கு எப்படியாவது இரண்டணா கொடுத்து இரண்டு பலூன்களை வாங்கிக் கொண்டுபோய்க் குழந்தைகளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்புறம் பதினாலணா மீதி இருக்கும். அந்த ‘தர்மராஜா’ நாயுடுவுக்கு அசலில் இரண்டறையணாவும் வட்டி ஒன்றே காலணாவும் கொடுத்துவிட்டால் பத்தே காலணாதான் கடைசியில் மிச்சமாகும். அதிலும் வெற்றிலை பாக்கு, புகையிலைக்கு ஓரணா போனால் பாக்கி ஒன்பதே காலணாதான்!– இவ்வளவு போதாதா, ராத்திரி சாப்பாட்டுக்கு?– இப்படியெல்லாம் என்னவெல்லாமோ எண்ணித் தனக்குள் சமாதானம் செய்துகொண்டே அருகிலிருந்த ஒரு கடைக்காரனிடம் ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி, “ஐயா! இந்தப் பழத்தில் எனக்கு நூறு போடுங்க!” என்று சொல்லிக்கொண்டே கையோடு கொண்டு வந்திருந்த கூடையைக் கீழே வைத்தாள்.

உடனே அவன் கைக்கு ஐந்து பழங்களாக எடுத்து, “ஒண்ணு, ஒண்ணு, ஒண்ணு!...... ரெண்டு, ரெண்டு,

ஒ.-5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/75&oldid=1149008" இலிருந்து மீள்விக்கப்பட்டது