கைமேல் பலன்
85
சொல்லித் தன் அடி வயிற்றில் லேசாக அடித்துக் கொண்டான் சின்னப்பன்.
"அப்படியா சங்கதி? அப்படின்ன நீங்க இப்போ என்ன தீர்மானம் பண்ணியிருக்கீங்க?" என்று கேட்டாள் செல்லம்.
"தீர்மானம் என்ன? நாளையிலேருந்து எல்லோரும் பழையபடி வேலைக்குப் போகப் போறோம்!" என்று சின்னப்பன் சொன்னன்.
"இதுக்குத்தானா இம்புட்டு நாளா ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தீங்க?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே செல்லம் முகவாய்க் கட்டையில் கையை வைத்துக் கொண்டாள்.
"எல்லாம் பட்டாத்தானே தெரியும்!" என்று அலுத்துக் கொண்டு கீழே உட்கார்ந்தான், கடமையை உணர்ந்து உரிமையை மறந்த சின்னப்பன்.
"நல்ல கூத்து, போங்க!" என்று சொல்விக் கொண்டே, செல்லம் தன் மடியிலிருந்து ஒரு பிடி வேர்க்கடலையை எடுத்து அவனுக்கு எதிரே 'கலகல' வென்று போட்டாள்.
"ராத்திரிக்காச்சும் கஞ்சிகிஞ்சி காய்ச்சலையா" என்று சின்னப்பன் ஒப்பாரி வைத்தான்.
"இந்தாங்க, காய்ச்சாத கஞ்சி!" என்று சொல்லி, ஒரு குவளே நிறையக் குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவனுக்கு எதிரே வைத்து விட்டுச் சிரித்தாள் செல்லம்.
***
எழுபது நாட்களுக்குப் பிறகு, 'எம். எம். மாட்ச் பாக்டரி'யில் மீண்டும் வேலை தொடங்கிற்று. முன்னெல்லாம் மாலை ஐந்தரை மணி மட்டும் வேலை செய்து கொண்