108 மகாவீ:- என்ன? என்ன? ஒரே முத்தம் விபீஷ :- ஒன்றுமில்லை மகாராஜா! ஏதோ மாயாஜாலம். என் மனைவியையும் மயக்கிவிட்டார்கள். பம் சித்:- என்னை யாரும் மயக்கவில்லை. நிதானத்தோடுதான் பேசுகிறேன். இளவரசர் நிரபராதி! 7. மாக மகாவீ:- எப்படி? சித்:- இன்பபுரியைக் கைப்பற்ற என் கணவர் எழுதிய சதிக் கடிதங்கள். (அவரிடம் நீட்டி) இவைகளை முன்பு ஒருமுறை இளவரசர் கைப்பற்றி, மீண்டும் இழந்தார் அவைகளே இந்தக் கடிதங்கள். (மகாவீரர் வாங்கிப் படித்தல்) விபீஷ:- அரசே! என்னவோ மாயம் நடக்கிறது. நீங்கள் நம்பாதீர்கள். மகாவீ:- (படித்து முடித்து) நான் நம்புவதா? விபீஷணரே மகாவீ:- பயப்படாதீர். நீதி தவறி நடக்கமாட்டேன். நீர் செய்த உதனிக் குத் தகுந்த பரிசு அளிக்கப் போகிறேன். விபீஷ:- (மகிழ்ந்து) பரிசு எனக்குப் பெரிதல்ல. நாடுதான் பெரிது மகாவீ:- அப்படிச் சொல்லாதீர். இது நான் தரும் பரி சல்ல. இந்நாட்டுச் சட்டம் தரும் பரிசு விபீஷ:- சட்டமா? உ மகாவீ:- இளவரச சன் ஸ்தானத்தை உமக்கு அளிக்கப் போகிறேன். விபீஷ:- (இளித்தபடி) இளவரசர் ஸ்தானமா?
பக்கம்:ஒரே முத்தம்.pdf/110
Appearance