உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 19 காட்சி 6. இடம்:- முல்லைக்காட்டில் ஒரு வீடு. [புத்தன். குமரி, சில வீரர்கள், குமரி தெரு நட னக்காரி வேடத்தில் இருக்கிறாள். வீரர்கள் அவள்சொந்தக்காரர்போல் இருக்கிறார்கள். புத்தன் சாதாரண உடையில் காணப்படு தல்) புத்தன்:- பத்திரம்! பவளமலைச் சாரலுக்கு வந்து சேருங் கள்.நானும் இரவு அங்கு வந்துவிடுகிறேன் குமரி:- எதிரிகள் கையில் சிக்கிவிடாமல்.... புத்தன்:- எல்லாம் தெரியும், நீங்கள் ஜாக்கிரை குமரி:- ஒருவேளை அரண்மனைக்குள் நுழையவேண்டி இருந்தால்? புத்தன்:- தந்திரம் அதிகம் வேண்டும். முடிந்தவரையில் முயற்சித்துப்பார். நான் வருகிறேன். . [புத்தன் போய்விடுகிறான். ஒருவன் மிருதங்கம் அடிக்கத் துவங்குகிறான்) மற்ற:- எல்லாரும் வாங்க! ஆடப்போறாங்க, ஆடப்போ றாங்க! (கூட்டம் சேர்கிறது. குமரி தெருக்கூத்துப்போல ஆடு கிறாள். இன்னொருவனும் ஆடுகிறான். குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்கிறது விபீஷணன் காலிகோஷ்டி என்பது தெரி கிறது மக்களுக்கு) ஒருவன்:- ராஜாங்கத்து காலிகள். மற்ற:- விபீஷணன் ஆட்கள். ஒருவன்:- சரி, இந்தக் குட்டியை சனியன் பிடிச்சுது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/21&oldid=1702606" இலிருந்து மீள்விக்கப்பட்டது