பக்கம்:ஔவையார் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஒளவையார் கதை


நெல்லிக் கனியைத் தின்றுலகில்
நீடு வாழ்ந்த தமிழ்க்கிழவி
வெல்லற் கரிய மாந்தரெல்லாம்
வியந்து போற்றும் ஒருகிழவி
கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி அவள்மொழியை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே !

வசனம்

என்று பிற்காலப் புலவரும் பெரிதும் புகழ்ந்து பாடினார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னாலே இத்தமிழகத்தில் வாழ்ந்த ஒளவையாரின் அருஞ்செயலையும் பெருந்திறனையும் அருள் மொழியையும் ஒருவாறு தெரிந்தோம்.

பாட்டு

கலைவாணி உருவான தலைவிவா ழியவே!
நிலையான தமிழ்செய்த தலைவிவா ழியவே!
மலைசூழும் உயர்நாட்டு மாதர்வா ழியவே!
அலையாத அறமருள் ஒளவைவா ழியவே!

இசைவேறு

வாழியவே ! பல்லாண்டு வந்துகதை கேட்டவர்கள்
வாழியவே ! ஒளவைகதை மனமகிழக் கேட்டவர்கள்
வாழியவே ! அவர்மொழியை வாயாரச் சொன்னவர்கள்
வாழியவே! அவர்வழியை வையமதிற் கொண்டவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/42&oldid=507931" இலிருந்து மீள்விக்கப்பட்டது