பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கடற்கரையோரங்களில் வசதியான துறைமுகங்கள் ஏராளமாக இருக்கின்றன. பெரிய பெரிய ஆறுகளும், உயர்ந்த மலைகளும் மலைக்குவடுகளும், ஆயிரக்கணக்கணக்கான வகைகளைச் சேர்ந்த மிக உயரமான வானளாவிய மரங்களும் பச்சைப்பசேலென்று பார்ப்பதற்கு மிக அழகாயிருந்தன. அந்த மரங்கள் எப்போதும் இலை தழைகளுடனேயே இருக்கும் என்று சொன்னார்கள். அது நம்பும்படியாக வேயிருந்தது. சில மரங்கள் பூத்திருத்தன; சில மரங்கள் பழுத்திருந்தன. ஒவ்வொரு வகை மரமும் அவ்வவற்றின் பருவத்திற்கேற்ற நிலையில் விளங்கின. தென்னை பனை இவற்றின் வகையைச் சேர்ந்த ஏழெட்டு விதமான மரங்கள் அங்கே இருக்கின்றன. அவை யாவும் பார்க்க அழகாகவும் கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தன. பைன் மரக்காடுகளும் ஆங்காங்கே யிருந்த சமவெளிப் பகுதிகளும் அழகானவை. அங்கே தேன் இருக்கிறது. வானம்பாடிகள் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கின்றன. வகை வகையான பழங்களும் வித விதமான பறவைகளும் காணப்படுகின்றன. சமவெளிகள் உழவுத் தொழிலுக்கு ஏற்றவையாயிருக்கின்றன. மேல் தீவில் பலவிதமான உலோகங்கள் இருக்கின்றன. ஆடுமாடுகள் வளர்ப்பதற்கும், நகரங்கள் அமைப்பதற்கும் ஏற்ற பகுதிகள் பல இருக்கின்றன. ஓடைகளிலும் ஆறு களிலும் தங்கம் நிறைய இருக்கிறது. தங்கச்சுரங்கங்களும் வேறு உலோகச் சுரங்கங்களும் இருக்கின்றன.

இந்தத் தீவுகளில் உள்ள மக்கள் எல்லோரும் ஆண்களும் பெண்களும் ஆடையுடுத்துவதே யில்லை. அந்த மக்களிடம் எவ்விதமான ஆயுதங்களும் இல்லை. அவர்கள் நல்ல உடற்கட்டும் அழகும் உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஆயுதம் நுனியில் கூரான சிறு கம்பு கட்டிய பிரம்புதான். அவர்கள் புது மனிதர்களைக் கண்டதும் பயந்து ஓடுகிறார்கள். பிறகு சிறிது பழக்கம் ஏற்பட்டதும் மிகத்தாராளமாகப் பழகுவதோடு, தங்க-