பக்கம்:கடல் முத்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கடல் முத்து

 'அக்கா, ஒங்கிட்ட ஒரு சேதி கேட்கலாமின்னு வந்தேன். எம் பெண்சாதி செத்து வீடே வெறிச்சோடிக் கிடக்குது, மறுபடியும் வீட்டிலே விளக்கு ஏத்தி வைக்க மனசிலே ஆசை துள்ளுது. அதுக்கு நம்ப பவளக்கொடியை எனக்குக் கொடுத்துட்டா எம்பிட்டோ சீரா வச்சிருப்பேன்."

தேவன் இப்படிப் பேசினன்.

கிழவிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

பவளம் கதவைப் படீரென்று சாத்தினாள்.

ஆக மூன்று உள்ளங்களிலிருந்தும் நீண்ட பெருமூச்சுப் புறப்பட்டது! ‘என்னா அக்கா, ரொம்ப யோசனை செய்யிறே. இடம் தேடி வருகுது சீதேவி. வார கிழமை நல்ல நாள்; பரிசம் போட்டுடலாம்."

கிழவி திரும்பவும் சிலையாளுள்.

‘அக்கா, என்ன பதிலே பேசல்லே. பவளக்கொடி அந்தப் பயல் நடேசனைக் கையிலே போட்டுக்கலாமின்னு நினைச்சிருக்கும். விதி யாரை விட்டுச்சு? இல்லாதபோனா அந்த அனாதைப் பய செத்திருப்பாளு? ஹூம்: முடிவான சொல் இது. உன் மகள் எனக்குத்தான். அதுக்கு ஏற்பாடு செஞ்சுத் தான் ஆகணும்.′

கணத்தில் வில் வண்டி பறந்தது. அதிகாரம் வரிசை செலுத்தப் பேசிச் சென்ற தம்பியின் உத்தரவைக் கேட்டுச் செல்லி பிரமித்தாள்; சுவர் ஒண்டலில் நின்றிருந்த பவளக்கொடி வாய் விட்டுக் கதறினாள்.

அவளுக்கு அந்த ஒரு ஏச்சு——அதுவும் இறந்த நடேசனைப் பற்றிய கேலி அவளை வெகுவாகத் துன்பப்படுத்தியது. ஆசை மச்சானின் அன்பு முகம் அவள் முன் தோன்றியது. அவனது ஆதரவு வார்த்தைகள் கணிரென்று ஒலித்தன. அவள் கண்ணிர் பெருக்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/15&oldid=1181165" இலிருந்து மீள்விக்கப்பட்டது