பக்கம்:கடல் முத்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏய் காளி அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றதுதான் தாமதம்: ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம் பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன். தலையில் சுமந்திருந்த பெரிய மூட்டையுடன் ரயில் நிலையத்தைவிட்டு ஊருக்குள் நடந்தான். வெய்யிலின் வெக்கை சற்று தணிந் திருந்தது; அந்தி மயங்கும் வேளை, ஊரின் முன்னடியிலிருந்த கடையில் சாயா குடித்து விட்டுப் பணத்தை முதலாளியிடம் நீட்டியவண்ணம் ஏனுங்க, ஆவணத்தாங்கோட்டைவரை துணைக்கு ஒரு ஆள் வேணும். சில்லரை எதாச்சும் கொடுத்துடலாம்: கிடைக் குங்களா?’ என்று கேட்டான் குமாரசாமி. அவசியமான ஒரு ஆளை வரச் சொன்னப் போச்சு' என்று சொல்லிவிட்டு, ஏப். காளி' என்று அழைப்பைச் சுண்டிவிட்டான் கடைக்காரன். சோம்பல் முறித்து விசித் தெழுந்த காளியை ஏற இறங்கப் பார்த்தான் குமாரசாமி. காளி, சீக்கிரம் எழுந்திருப்பா, ஒரு கிராக்கி வந் திருக்கு. பாக்கி தூக்கத்தைத் திரும்பவந்து மறந்துடாமல் தூங்கிக்கலாம், ஐயாவோடே சாலவரை போகனும் என்று மேலும் துரிதப்படுத்தினன் டீக் கடைக்காரன். . கந்தலும் கிழிசலுமாகப் பார்க்கப் பரிதாபமாகத தோற்றம் கொடுத்த காளிக்கும் ஒரு தேத் தண்ணீர் வாங் கிக் கொடுத்துப் புறப்பட்டான் குமாரசாமி. அந்தி மங்கல் எங்கும் படர்ந்தது. சூரியனின் கதிர் கள் பொன் ரேக்குப் பெற்றுப் பிரகா சித்தன. இயற்துை. கண்ணுமூச்சு விளையாடியது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/68&oldid=765042" இலிருந்து மீள்விக்கப்பட்டது