பக்கம்:கடல் முத்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏய் காளி 61 இதுக்கு இம்மாம் தெகப்புக் கொள் lங்களே. அஞ்சாறு வருசத்துக்கு முந்தி ஜப்பான்காரன் பர்மாவைக் குண்டு போட்டுத் தீக்கிரையாக்கினதை நீங்க கண்ணுலே காணக் கூடத் துணிச்சல் படமாட்டிங்க போலே. ஹல்ம்; பாவிப்பய சண்டைவந்து...' என்று பேசிக்கொண்டு வந்த காளியின் குரலில் அளவிறந்த துயரம் தடம்பதிந்திருந்தது. இதை யுணர்ந்த குமாரசாமி கனிவுடன் பச்சாதாபத்தோடு காளி யைப் பார்த்தான். அவன் கண்களினின்றும் அருவி சோர நீர்ச்சொட்டுகள் படிப்படியாக வழிந்துகொண்டிருந்தன. காளி. ஐயா, இருந்திருந்தாப்போல இப்படி ஏன் கண்கலங்கு துன்னுதானே ரோசன பண்ணுறிங்க, வயிற்றுப்பிழைப்புக் காக நானும் என் தங்கச்சியும் கடல் கடந்து பர்மா தேசத் துக்குப் போனேம். பெற்றவுங்க எங்களை அனதரவா விட்டுட்டுச் செத்துட்டாங்க. வேலை செஞ்சு பிழைச்சு அதிலே கிடைக்கும் வரும் படி ைய க் கொண்டு நானும் தங்கச்சியும் காலத்தைக் கடத்திளுேம். இப்படி வருசம் ஒண்ணு தாண்டிப்போச்சு. அப்புறம்தான் சண்டை மூண்டு குண்டு வீச்சுத் தொடங்கியது. கடை அலுவலா அடுத்த வங்குசாலை வரை போயிட்டுத் திரும்பி வந்து பார்த்தேன். ஊரே நிர்த்துரளிப்பட்டுச்சு. பி ண க் காடு கணக்காப் பட்டணம் தோணுச்சு. உயிரு தத்தளிக்க, பதைச்ச நெஞ் சோடு என் கண்ணை எங்கெல்லாமோ தேடினேன்; அலசி னேன்; காண முடியலை. அப்பவே என் ஜீவன் வடிஞ்சிருச்சு. உயிர் தப்பிச்ச இரண்டொரு பொங்கிச் சாமியார்களேயும் விசாரிச்சுப் பார்த்தேன். தெரியாதுன்னுட்டாங்க. நடைப் பிணமாக நடந்து நம்ப மண்ணை மிதிச்சேன். சுற்றுவட் டாரத் திருநாள் ஒண்ணு பாக்கி வைக்காம இன்னமும் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன். ஐயாவே, நீங்களும் ஒரு தங்கச்சியோடே பிறந்தவங்கதானுங்களே. என் ஆசைத் தங்கையை என் உயிர் இருக்கிறதுக்குள்ளே காணலாமா? காணக்கூடுமா?- என்ருன் காளி. அவன் பேச்சில் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/70&oldid=765045" இலிருந்து மீள்விக்கப்பட்டது