பக்கம்:கடல் முத்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 கடல் முத்து எடுத்துக்க... தொடர வகையின்றி அவன் வார்த்தைகள் உதட்டுடன் ஒட்டிவிட்டன. என்ன தோன்றியதோ, மாடன் 'சடக் கென்று அண் ணனின் தலைமாட்டில் இருந்த கஞ்சிக் குவளையைப் பார்த் தான்; அது காலியாகவிருந்தது! பக் கென்றது மாட லுக்கு. அவன் மனச்சாட்சி அவனைத் தூண்டில் போட்டு இழுத்தது. அகல்விளக்கின் மங்கல் ஒளியில் முருகுவை நோக்கி ன்ை: அவனுடைய இமைகள் மூடியிருந்தன. பேச்சு மூச் சற்றுப் பிரேதக் கணக்கில் அவன் கிடந்தான். 'அண்ணுச்சி! ஐயோ! நான் பாவி! கொலைகாரன்...!" என்று ஒலமிட்டான் மாடன். உச்சாணிக் கெம்பில் அந் தரத்தில் கால் தவறித் திணறுபவனைப் போன்று அவன் தத்தளித்தான்; பதறிஞன். வெளியே மேகங்கள் வானத்துப் பாசறையில் போர் முரசம் கொட்டின. முகில் வானம் மழை பொழிந்தது. அதே கணத்தில் மச்சான்!” என்ற சப்தம் கேட்டது. மாடன் பிரமித்துத் திரும்பிப் பார்க்கலானன். பதட்டத் துடன் பூங்கொடி வஞ்சி நின்றிருந்தாள். "உங்க அழுகை சத்தம் கேட்டுது. உசிரே போயி ருச்சு எனக்கு! ஒடியாந்தேன்’ என்ருள் வஞ்சி. தேரையைக் கவ்வும் பாம்புபோல மாடன் வஞ்சியின் கழுத்தில் கையைக் கொடுத்துக் குரல்வளையைப் பற்றினன். பாவி மகளே, என் மனதை மாற்றி, என் அண்ணனை யும் சாகடிச்சிட்டியே!...பாதகி! ...அதுக்குப் பழி உங் கிட்டே வாங்கினத்தான் எனக்கு மனசு ஆறும்..." வஞ்சியின் ஒலம் வளர்ந்தது. அப்போது தம்பி..." என்ற மெல்லிய குரலே அவன் கேட்டான். கேட்டதுதான் தாமதம், அவன் பிடி தளர்ந்தது. அ ண் ணு ச் சி !’ என்று கூவியழைத்து ஒடிஞ்ன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/81&oldid=765057" இலிருந்து மீள்விக்கப்பட்டது