பக்கம்:கடல் முத்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவிலே வாழ்வு 8Ꭵ மின்னல் துவளும் நேரம் வ ள் வரி க் கு ச் சுயநினைவு அற்றுப் புவனமே பம்பரம் சுற்றியது. மறுகணம் அந்தப் பெண்ணின் கருணைக்கு நன்றி .ெ த ரி வி த் து வி ட் டு, உடனே தன் கணவன் வீட்டை நோக்கி வழி நடந்தாள்ஒடினள் போட்டியிட்ட மனப் புயலுடன். மச்சானுக்கு யாதொரு குறையும் ஏற்படாதிருக்கவேண்டுமென்று வேண் டிக்கொண்டாள். வள்ளியின் மனம் படபடவென்று அடித் துக்கொண்டது. ஐந்து விரல்கள் அழுந்திப் பதியத் தன் கன்னத்தைச் சுவைபார்த்த மாரியை அவள் நினைக்கவும் துணியவில்லை. ஆனல் இனிய மொழி பேசும் மாரி செல்ல மாகத் தன் கன்னங்களைத் தட்டியதைத்தான் மீண்டும் நினைவுகூர்ந்தாள். இப்போது அவள் மனம், மாரிக்கு என்ன நேர்ந்ததோ என்று துணுக்குற்றது. வேகமாக ஓடினுள். பிணம் போலத் தரையில் கிடத்தப்பட்டிருந்த மாரியைக் கண்ணுற்ற வள்ளிக்கு உலகமே சுழன்றது. "மச்சான்' என்று கூவியழைத்து அலறிள்ை. வள்ளி ைய த் திரும்பவும் அவ்வீட்டில் க ண் ட உறவினர்கள் அவளது உயர்ந்த போக்கைக் கண்டு வியந்தார்கள். தன் மனைவியைப் பார்த்ததும் மாரி கண்ணிருகுத்த வண்ணம், வள்ளி, நான் மகா பாவி, நீயே என் வீடு தேடி வந்துட்டியா? ஆமா, பூமியாட்டம் பொறுத்திருந்த ஒனக் குத் திங்கு பண்ண நெனச்சிருந்ததுக்கு இந்தத் தண்டனை போதும். நான் இனிப் பிழைக்கமாட்டேன். என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்க, அப்பத்தான் என் உடம்பு வேகும்..." என்ருன் மாரி. மேலே அவனல் பேச முடியவில்லை. அதுவே அவன் இறுதிப் பேச்சாகவும் அமைந்தது. அழுது புரண்டாள் வள்ளி. அந்த வீட்டில் அப்புறம் ஒரு நிமிஷம்கூடத் தாம திக்காமல் அதே இரவில் தாய் வீடு திரும்பினள். வெள்ளியைக் கண்டதும்தான் தைலம்மாவிற்கு உயிர் வந்தது. மாங்குடியிலே பரிசம் போட்டு முகூர்த்தத்திற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/90&oldid=765067" இலிருந்து மீள்விக்கப்பட்டது