பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


உரிமைக்குக் கொடியெடுத்துப் போர் நடத்தும்
உழைப்பாளித் தோழர்களே! இறந்த பின்பு
மறுஉலகில் ஒன்றுபடும் எண்ணம் வேண்டாம்.
மண்ணுலகில் விண்ணுலகை வரவ ழைக்கப்
பொறுமையுடன் போரிடுவீர்! கோயிற் கூட்டம்
புதுத் தடைகள் நம்வழியில் வைத்தால்,
சற்றும் இரக்கமற்ற போர்தொடுப்போம்; மக்கள் ஆற்றல்
எந்நாளும் இவ்வுலகில் தோற்ப தில்லை.

————————