பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

எகிப்து நாட்டைப் பழம்பொருள்களின் சுவர்க்கம் என்று குறிப்பிடலாம். அங்குக் காணப்படும் பழம் பொருள்களில் மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்வது பிரமிடுதான், பிரமிடுகளை நாம் படத்தில் பார்த்திருக்கிறோம். அவைகளைப் படத்தில் பார்த்தால், அவற்றின் சிறப்பு நமக்குத் தெரியாது. அவற்றைக் கண்ணெதிரில் கண்டால்தான், அவைகளுடைய சிறப்பு நமக்குப் புலப்படும். எகிப்து நாட்டில் வந்து காலடி வைத்தவுடன், பிரமிடைப் பார்த்ததும் எல்லாருடைய உள்ளத்திலும் புல கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பும்.

எகிப்து நாட்டை ஆண்ட பாரோ மன்னர்கள் இவ்வளவு பெரிய செயற்கை மலைகளை நிறுவக் காரணம் என்ன? கல்லே கிடைக்காத பாலை நிலத்தில் மாபெரும் பாறைகளை எவ்வாறு கொண்டு வந்தார்கள் ? பெரும் பாறைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அக்காலத்தில் அவர்களால் எப்படி அடுக்க முடிந்தது? இம்மலைகளை உருவாக்க எவ்வளவு மக்கள் இடையறாது உழைத்திருப்பார்கள் ? எவ்வளவு பொருள் செலவாகி இருக்கும்? என்பன போன்ற கேள்விகள் தோன்றும். அங்குள்ள பிரமிடுகளில் மிகவும் பெரியது ஏறத்தாழ 137½ மீட்டர் உயர முடையது ; ஏறத்தாழ 805 மீட்டர் சுற்றளவுடையது. இதன் பருமனை எண்ணும்போது, உலக விந்தைகளில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

ஒரு மனிதன் இறந்தவுடன், அவனுடைய ஆவிக்கும் உடலுக்கும் மீண்டும் எந்தவிதத்-