பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

“ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து
சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்

ஒருபது பாட்டும்,”

என்றும், பாண்டிமண்டல சதக ஆசியர்.

தமிழ்ச்சங்கத்தின், நிலைபெற் றுயர்பத் துப்பாட்டும்,”

என்றும், இந்நூலைப் புகழுமாற்றால் இதன் பண்பினை நன்கு உணரலாம். இப் பத்துப்பாட்டுப் பனுவலின் சுவையை நன்கு துய்ப்பவர்கள் ஏனைய இடைக்கால நூல்களைப் படிக்க உள்ளம் கொள்ளார் என்பதையும், பத்துப்பாட்டே உள்ளதை உள்ளவாறு உரைக்கும் வரலாற்று நூல் ஆகும்; பின்வந்தவை கற்பனை நிறைந்தவை; அக்கற்பனையும் பொருட்கிசைந்த கற்பனை அன்று; இலக்கணத்திற்கு இயைந்த கற்பனையும் அன்று, என்பதையும் அறுதியிட்டு உறுதியாக எடுத்துக்காட்டுவார் போலப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள்,

“பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே,”

என்று பாடி மகிழ்கின்றார்.

இத்தகைய மாண்பு வாய்ந்த பெருநூற் கடலினின்று கிடைக்கும் நித்திலங்களை எடுத்துக் காட்டுவது இச்சிறுகட்டுரையால் ஏலாது. இஃது இயற்கைக்கு ஓர் இருப்பிடம், ஓவியத்திற்கோர் உறைவிடம், உவமை பயணிக்கோர் உயர்விடம். தமிழக நாகரிகத்தினைத் தனிச்சிறப்புடன் காட்டுதற்குரிய தகவிடம் என்று கூறின் அது மிகையாகாது.

“இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறை
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும், குன்று.”