பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗露瓣 கண்ணன் பாட்டுத்திறன் பின்னைப் பிராயத்தை இழந்திரே-நீர்! பின்னும்அந் நிலைபெற வேண்டீரோ? குழந்தைகள் ஆட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக் கோலநன் னாட்டிடைக் காண்பீரே; பங்கள் மீட்குறலாம்-நீர் என்ற பகுதியில் இதனைக் கண்டு மகிழலாம். பொறுப் பற்ற விளையாட்டு ஒன்றுதான் உலக இயற்கை என்று குழந்தை கருதுகின்றது. அதற்குமேல் அதன் மனம் சித்திப்பதில்லை. குழந்தை வளரவளரத் தன் சுற்றுப்புறச் சூழ்நிலையைத் தெரிந்து கொள்ள விழைகின்றது. இந்த ஆraம்தான் வளர்த்து அறிவு நிலையை எட்டியவுடன் பஞ்சபூதங்களைச் சோதிகக அடிப்படையாக அமைகின் தது. இந்த விளையாட்டு நிலை-இந்த ஆரிய நிலைகழித்து போனதற்காக நாம் இரங்குகின்றோம். சங்கப் புலவர் ஒருவர் கழித்த தம் இளமை நிலைக்கு இரங்கி அதற்கு அதிகா திலையை அளித்துச் சென்றுள்ளார் : இனிதினைந்து இரக்க மாகின்று திணிமணல் பாவைக்குக் கொய்பூத் தைஇத்

  • சிரொடு கை பிணைந்து ழித் தழி:இத் துரங்குவழித் துரங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நலனிப் படிகோடு ஏறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

ម្ល៉ោះឯង 1. வேதாந்தப் பாடல்கள்-25. கற்பனையூர். 2. புறம்-243.