பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தாமரைக்கும் இறைவன் திருத்தாளுக்கும் உள்ள ஒப்புமையை எடுத்துச் சொல்லலாம். இவற்றுக்கு மேலே மற்றொன்று சொல்லவேண்டும். இறைவனுடைய தாளையே முத்தி என்று முன்பு சொன்னேன். பேரின்பத் தேன் இறைவன் தாளில் இருக்கிறது. அந்தத் தேனை உண்ணுகின்ற வண்டுகள் பெரியவர் களுடைய உள்ளங்கள். திருக்கோத்தும்பி புத்தியை வண்டாகவும், இறைவனுடைய திருத்தாளைத் தேன் சொரியும் தாமரையாகவும் சொல்வது பல பெரியோர் களுக்கு இயல்பு. மணிவாசகப்பெருமான் திருக்கோதும்பி என்று ஒரு பதிகம் பாடி இருக்கிறார். 'கோத்தும்பியே, நீ இறைவ னுடைய திருவடிக் கமலத்தில் போய் ஊது” என்று சொல்வதாக அமைந்த பாடல்கள் அப்பதிகத்தில் இருக்கும். அங்கே தும்பி என்று விளித்தது மனத்தையே. உலகத்தில் உள்ள மயக்கம் தரும் பொருள்களாகிய மலத்தில் மொய்த்து விழுவதை விட்டுவிட்டு இறைவனுடைய மலர் அடியில் மொய்த்து இன்பம் பெற வேண்டுமென்ற கருத்தை அப்பாடல்களில் சொல்கிறார். - 'தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும், காண்தொறும், பேசுந்தொறும், எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக, ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றுதாய், கோத்தும்பி.” சிறிய தேனும் பெரிய தேனும் வண்டு உலகிலுள்ள பூக்களில் இருக்கும் தேனை உண்ணுகிறது. அது மிகச் சிறிய அளவில் உள்ள தேன். அதனை உண்பதற்கு நாள்தோறும் பறந்து சென்று அலைகிறது வண்டு. அப்படி அலைந்தாலும் தான் சென்று சேருகிற மலரில் தேன் குலைந்து இருக்கலாம். பிற வண்டு உண்டதால் கலைந்தும் இருக்கலாம். அவ்வாறின்றி அங்கே தேன் இருந்தாலும் அந்த மலரில் உள்ள தேன்மாத்திரம் அதற்குப் போதாது. பல பல மலர்களிடம் சென்று சிறிய சிறிய அளவில் தேனைத் தொகுத்து அடையில் கொண்டு போய் வைக்கிறது. அப்படி வைத்தாலும் அந்தத் தேனைப் பிறர் 314