பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 மட்டும் பாடுகிறார். "தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும்சுடரே (23) என வரும் பாட்டில் அத்தலத்தின் பெருமையை ஒருவாறு பார்த்தோம். இந்நூலில் வரும் பாடல்களில், "மேதினி யில் சேலார் வயற்பொழிற் செங்கோடு" (2) என்றும், 'கன்னிப் பூகமுடன் தருமா மருவு செங்கோடு” (3) என்றும் பாராட்டுகிறார். வயலும் பொழிலும் வளம் பெற்றிருப்பதை இணைத்துச் சொல் வது அருணகிரியார் இயல்பு. திருச்செந்தூரைப் பற்றிச் சொல் கையில், "செந்தூர் வயற்பொழில்" (40) என்று சொன்னார். முருகப்பெருமானுடைய சீரையும் சிறப்பையும் உணர்த்தும் திருநாமங்கள் பல இப்பாடல்களில் வருகின்றன. அடிப்பட்டு வழங்கும் திருப்பெயர்களையும் அருணகிரி நாதரே பாட்டுக்கு இயையப் படைத்துக்கொண்ட நாமங்களையும் காணலாம். எம்கோன், கருமால் மருகன், செங்கோடன், செம்மான் மகளைக் களவுகொண்டு வருமாகுலவன், சேவற்கைக் கோளன், போர் வேலன், மன்றாடி மைந்தன், மாலோன் மருகன், மெய்ஞ்ஞான தெய்வம், வள்ளியை வேட்டவன், வானவர்க்கு மேலான தேவன், வேல் எடுத்து விளையாடும் பிள்ளை, வேல் தொட்ட காவலன் என்பன இந்த ஆறுபாடல்களில் வந்துள்ளன. பிற தெய்வங்களையும் தேவரையும் அங்கங்கே குறித்துச் செல்கிறார். சிவபெருமான் மன்றாடியாகக் காட்சியளிக்கிறான் (2). திருமால் மாலோனாகவும் (2), கருமாலாகவும் (3) நிற்கிறார். அவர் பாரிசாத மலர் கொணர வலம்புரியை முழக்குகிறார்; அதன் ஓசை விண்கமழ் சோலையும் வாவியும் கேட்கிறது (5); அவர் உந்தி மண்கமழ்கிறது (5). - . பிரமதேவன் பங்கேருகனாகவும் (1), நான்முகனாகவும் (2) வருகிறான். அவன் படைப்புத் தொழிலுடையவன் (2) தருக் குற்றமையால் முருகனால் தளையிடப்பட்டவன் (1). வானவர், தங்களுக்கெல்லாம் மேலான தேவனாக முருகனை வைத்து வணங்குகிறார்கள் (2), சூரனைக் கண்டு பயந்து கொண்டு ஓடினார்கள்: முருகன் அவனைச் சங்காரம் செய்தமையால் அச்சத்தினின்றும் நீங்கினார்கள் (4) அவர்கள் வாழும் விண்ணில் கற்பகமரச் சோலையும் வாவியும் உள்ளன. (5). 13C