இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உன்னைத்தேடி வருகிறேன்.
நீ வைக்கோற் போரில் சாய்ந்தவாறு
கரும்பைக் கடித்துக் கொண்டிருக்கிறாய்.
என் கண்,
மதுவுண்ட வண்டாகிறது.
என்மனம்,
மாங்கொழுந்தைச் சுவைத்த குயிலாகிறது.
என் வாய்,
கரும்பே இன்னொரு கரும்பைக் கடிக்கும்
காட்சி இதோ, இதோ'
என்று பாடுகிறது.
42
63