பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


செம்படவன் ஒருவன்,
இரண்டு வரால் மீன்களைப்
பிடித்து வருகிறான்;

நீ அவற்றை விலைக்கு வாங்கித்
தடாகத்தில் துள்ள விடுகிறாய்.

வேடன் ஒருவன்
இரண்டு புறாக்களைப்
பிடித்து வருகிறான்;

நீ அவற்றையும் வாங்கி
வானத்தில் பறக்க விடுகிறாய்.

நான்
என்றோ என்றோ
என் உள்ளுயிரை வாங்கி வைத்திருக்கும்
உன்னை வியந்து பார்க்கிறேன்.

“என்ன பார்க்கிறீர்கள்... உங்களுக்கும்.

“வேண்டாம்... வேண்டாம்...
என்னை மட்டும் விட்டு விடாதே!
விடுதலை செய்து விடாதே!”
என்று கெஞ்சுகிறேன்.


 

49

72