பக்கம்:கனிச்சாறு 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  181


ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால்
ஊசிய கருத்தை உரைத்த புராணங்கள்,
வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் -
ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா? 40

ஆரிய மாயையில் அழுந்திக் கிடந்த
வீரியம் குறைந்த திரவிடர் விலாவில்
செந்தமிழ் மறத்தைப் பாய்ச்சிட இராப்பகல்
அந்தமிழ் பேசிய - எழுதிய - அண்ணா
பரப்பிய கருத்துகள் நச்சுகள் என்றால் -
சுரப்புடைப் பார்ப்பனர் சொன்னவை எல்லாம்
நச்சிலா உரைகளா? நன்மைதந் தவையா?
கச்சி ‘உருவம்’ கதைத்தது சரியா?
என்ன இக் கொடுமை? என்ன இக் கூற்று?
சின்ன பெரியவாள் செருக்குதான் என்ன? 50

சேற்றில் புழுக்களாய் - சிற்றுயிர் இனங்களாய்
மாற்றிட இயலா மந்தை ஆடுகளாய் -
வழிவழிப் பார்ப்பனர் வந்து புகுத்திய
இழிவினை உணரா இழிபிற விகளாய் -
ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்
சீரிய மொழியையும், சிறந்தநல் லறிவையும்,
ஆயிரம் ஆயிரம் அறிவு நூல் தொகையையும்,
ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்,
நாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்,
ஆகிய அரசையும் ஆட்சி நலத்தையும், 60

ஒருங்கே அழித்துக் கொண்ட ஓர் இனத்தைப்
பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த -
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,
மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,
அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ரரசனை -
இழிப்புரை சொல்வதா? சொல்லியிங் கிருப்பதா?
பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா?
நச்சு விதைகளா, நயந்து அவர் சொன்னவை?
பச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை? 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/217&oldid=1437410" இலிருந்து மீள்விக்கப்பட்டது