பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐
அறப்பழி குலுங்கும் ஆளுமை
இறப்பவழிந் துய்க இந்திய நாடே !
ஆரியப் பதடியர் அருந்தமிழ் செகுக்கும்
பூரியக் குறும்பின் புல்லியர் ஆட்சி
என்றினித் தீருமோ இரிந்துகால் முறிமோ?
மன்றிடைத் தமிழினம் மலர்ந்து மணக்குமோ?
காமரா செனுமோர் கடமைத் தமிழ்மகன்
ஏமுறச் சூழாது இந்திரா வென்னும்
மெய்ம்மை வெளிறி மிக்குரை செருக்கும்
கைம்மைப் பார்ப்பினி கையகப் படுத்திய
இந்திய முழுநிலம் ஏற்றமுற் றுய்யுமோ?
முந்தைய உரிமையும் முளைத்துச் செழிக்குமோ?
10
அறமுறை மன்றின் குரல்முறை நெரித்து
மறமுறை வலித்து மக்க ளாட்சியின்
முற்றா ளுமைநெறி முழுவதும் பற்றிக்
கற்றார் நிறைமனம் கசிந்துலை வுற்றிட
வல்லதி காரம் வழிவழிக் கொளுவுமோர்
சொல்லுதிர்த் திசைக்கும் சூழ்ச்சியோ ளாகி
நிகரமை எனும்பெயர் சாற்றி நெறிபிறழ்ந்து
தகவுகுத் தரும்பெறல் தலைவருந் தொண்டரும்
வெஞ்சிறை யொடுக்கி விளம்பரந் தருக்கி
அஞ்சுறை மக்கள் அறியாமை நிலத்துள்
20
திரைவா னொலியொடு தாட்கொழு வுழுது
புரையும் பொய்யும் புனைவதும் வித்திக்
கள்ளத்துக் கொண்ட களவூ தியத்தின்
வெள்ளம் பாய்ச்சி விரகுகள் விளைக்கும்
அறப்பழி குலுங்கும் ஆளுமை
இறப்பவழிந் துய்க இந்திய நாடே!
-1976