இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“பொன்னய்யா, புளிவிலைதான் என்ன என்றேன்;
புலிவிலையைச் சொல்கின்றீர் போலும் மேலும்,
என்னய்யா அரிசிவிலை என்றால், நீரோ
இங்கிலாந்தின் அரசிநிலை இயம்பு கின்றீர்!
சின்னய்யா பருப்புவிலை கேட்டான், ஆனால்
சீர்யானை மருப்புவிலே கூறி விட்டீர்!
தன்னையன்றி வேறெவரும் இல்லை என்ற
தருக்குடனே இருக்கின்றீர் அன்ருே? பாரும்!”
முனைப்போடு கல்லூரிப் பட்டம் பெற்ற
முனியப்பன் ஊரார்முன் முறையிட் டானே!
“தனிப்பட்டோர் வாணிபத்தை நடத்தி வந்தால்
தன்னலமும் தரமில்லாச் சரக்கும் மிஞ்சும்!
இனிப்பான சொல்பேசி இலாபஞ் சேர்ப்பார்:
ஏராள சொத்துகளைத் திரட்டிக் கொள்வார்!
தனிப்பாதை இனிப்போவோம் வாரீர்” என்றான்,
தயக்கமுற்றோர் மயக்கத்தைத் தெளிய வைத்தான்!
76