பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தது நல்லதாகப் போயிற்று. விதி. இல்லை, இல்லை, தெய்வம்தான் அவனை அந்நேரத்தில் இங்கே அனுப்பி வைத்திருக்கிறது. இல்லாவிட்டால், விவரம் தெரியாமல் போயிருக்கும்; அப்பா அம்மாவை உயிரோடு பார்த்திருக்க வும் முடியாது. எனக்குக்கூட அதிர்ஷ்டம் என்கிற ஒண்ணு: இருக்குத்தான் போலே!-நன்றி சொல்ல ஒரு தெய்வ மாச்சும் இருக்கே?' - அலைகளின் ஆர்ப்பாட்டம் சகிக்க வில்லை! - பாட்டி வெடிகுண்டைத் துரக்கிப் போடுகிறாள்! விட்டகுறையும் தொட்ட குறையும்போல, அம்மீாவுக் கும் அப்பாவுக்கும் எழுதி வைத்த மாதிரி நாடித்துடிப்பு *சிலேட்டுமம் பேசி அடங்கிக் கொண்டே வருகிறதாம்!. வந்த டாக்டரும் கைகளை அகலமாக விரித்தார்; ஆனாலும், இருவரும் தம்பதி சமேதராகப் பிழைத்தால் மறு பிழைப்புத்தான் என்ற மனித அபிமானத்தில் ஆளுக்கு ஓர் ஊசியைச் செலுத்தினார்: இன்னும் மூன்றே முக்கால் நாழிகை கழிந்தால்தான், தம்பதி சமேதராகவே நெஞ்ச டைப்பு நோய்க்கு ஆளான அப்பா-அம்மாவின் உயிர் களுக்கு உண்டான தீர்ப்பைச் சொல்லமுடியும் என்றார்: விதிக்கு மருந்து கிடையாதெனவும் கூறினார். அவர் கடன் பணி செய்து கிடப்பது!-போய் விட்டார். பிற்பகலில் கூட, சூடு தணியவில்லை.

பார்வதி எதை நினைப்பாள்? எதை மறப்பாள்: எதைத்தான் மறுப்பாள்? நம்ப பாருக் குட்டியைத் திருமணக் கோலத்திலே தாவியும் மாலையுமாய் தாம. ரெண்டு பேரும் பார்த்தால்தான், நம்ம ரெண்டு பேர் ஜீவனும் நம்மள்ோட உடம்பில்ே நல்லபடியாய் நிலைக்குமாக்கும்!” என்று அம்மாவும் அ ப் பா வும் நித்த நித்தம் செத்துச் செத்துப் பிழைத்த நெருக்கடி நிலைமையிலேயும் ஒருவருக்கொருவர் ஒரு நாளைக்கு

120