பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பினாள் பார்வதி. செந்தில் வந்தவுடன் தன்னை வீட்டில் வந்து உடனடியாகச் சந்திக்கச் சொல்லும்படி பெரியவரிடம் கேட்டுக் சொண்டாள்; அவசரம், ரொம்ப ரொம்ப அவசரம்' என்றும் தினைவு படுத்தினாள். வீட்டுக்கு வந்துதான் அவள் மூச்சுவிட்டாள்; அம்மாவும் அப்பாவும் மயிரிழை கூட ஆடாமலும் அசை யாமலும் மெளனமான உயிர்ப்பிண்டங்களாகக் காட்சி தந்தபடியே, ஜீவ மரணப் போராட்டத்தை இன்னமும்கூட நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்!- இவர்கள் இரண்டு பேருக்கும்தான் எத்தனை ரோஷம், வீம்பு வைராக்கியம்!... மணி : 2-2 0. டாக்டர் வைத்த கெடு நெருங்கிக் கொண்டிருந்தது!. நிற்கவோ, நிலைக்கவோ நேரம் ஏது? உயிர்க் கழுவில் துடித்தவளாக, உட்புறம் விரைந்தாள். கலவரமான சத்தங்களுக்கு நடுவில், அவள் தேடியவை இரண்டுமே சோதனை நடத்தாமல் கிடைத்தன!- ஒன்று: காஞ்சிபுரம் பட்டுச் சேலை; சன்னமான ஐரிகை போட்டது; எலுமிச்சை நிறம். 2 : மஞ்சள் துணுக்கு முடிந்த தாலிக்கயிறு வெளிப் புறம் திரும்பினாள். வாழ்க்கையோட விதியும் வினையும் வேடிக்கையாகத்தான் அமைஞ்சிடுது கமலி தன்னோட கல்யாணத்துக்காக எனக்கு எடுத்துத் தந்தது இந்தப் பட்டு; மஞ்சள் தாலிக் கயிற்றை ஒருசமயம் அறுபத்து மூவரி இருவிழாவிலே விளையாட்டாக ஐம்பது காசு கொடுத்து வாங்கினேன்! ஈரம் அவள் அப்போது அணிந்திருந்த எலுமிச்சை நிறச் சோளியிலும் வழிந்தது. கணங்கள் பேய்க் கணங்களாக உருமுகின்றன. தேடிப் போகாத பச்சை மூலிகையாகத் தேடிவந்து சிக்கினான் முருகையன்.

1 2 3

123