பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் - - பார்வதி ஒடவில்லை; வெளிப்புறக் கூடத்தில் வந்து நின்றாள். ஹைதர் காலத்தின் நிலைக்கண்ணாடி அவள் முன்னே வந்து நிற்கிறது. மகாலட்சுமி பூலோகத்தில் குளித்து முழுகி மஞ்சள் பூசிக் கொண்டால், பார்வதியைப் போலவேதான் காட்சி தருவாளோ? .

  • சுப்ரபாதம் மிதந்து வருகிறது.

பூவோடு பொட்டும் மணத்தது. புது நிலவு ஆனது புன்னகை. - நாணத்தின் மருட்சியில் கோலமதர் விழிகள்” கண்சிமிட்டின. முகப் பருக்கள் என்றால், ஒரு கவர்ச்சிதான். அழகும் கவர்ச்சியும் கொழித்த இளம் மார்பகத் திலே, ஒற்றை வடச் சங்கிலியின் மயில் பதக்கம் மையம் கொண்டது, 'நான் புஷ்பவதியாகி எனக்குச் சடங்கு சுற்றி னப்ப, அம்மாவும் அப்பாவும் கூட்டுச் சேர்ந்து சிறுவாடு சேர்ந்துச் சரபோஜி அரமனைப் பக்கம் இருந்த பத்தர் கிட்டே செஞ்சி போட்டது. இது !’

சேலையின் முகதலைவு சீர் ஏந்திற்று.

20