பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வத்சல்ா, 'பாரு: எங்க சாதியிலே இருந்துயிட்டு வர்ற வரதட்சணைக் கொடுமைங்க உங்க இனத்திலேயும்கூட இருக்குமா?' என்று விசாரித்தாள். - பார்வதியின் எழிலார்ந்த வதனம் சிறுத்தது; விழிகள் சிவந்தன. நல்லாக் கேட்டே, போ! வரதட்சணைப் பிரச் சனைக்குப் பலியாகாத சாதி சமுதாயம் நம்ம நாட்டிலே எங்கே இருக்குதாம்,' என்று பதிலுக்குக் கேட்டாள். 'வத்சலா! முந்தி ஒரு தரம் சொன்னதையே இப்பவும் உன் கையிலே நினைப்பூட்டுறேன். வரதட்சணைக்காக இல்லாமல் எனக்காகவும் என்ளுேட பரிசுத்தமான அன்புக்காகவும் மாத்திரமே என்னைத் திரிகரண சுத்தியோட அங்கீகரிச்சு ஊர் உலகத்தின் சந்நிதானத்திலே என் கழுத்திலே மனசு பூர்வமாய் மூணு முடிச்சுப் போட முன் வர்ற உண்மையான மனிதாபிமானம் கொண்ட ஒரு நல்ல பிள்ளைக்குத்தான் நான் என்ளுேட பவித்திரமான உயிரையும் புனிதமான உடலையும் அர்ப்பணம் செய்வேன்! என்னுடைய இந்த வைராக்கியத்திலே, எனக்கு நானே தான் விதி! இல்லாட்டி விதியோட எழுத்தைக் கிழிச்சு வீசிட்டு. எனக்கு நானே முற்றுப்புள்ளி வச்சுக்கிடவும் தயங்கமாட்டேன்! இது...' அவள் பேச்சை முடிக்கவில்லை. x

él.

41